எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 175 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 175 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 59 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 6:56 pm

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 175 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 59 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-ஆம்தேதி தொடங்கியது. இதையடுத்து கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம்(தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கலுக்கு கடைசிநாளான திங்கள்கிழமை வரை திமுக, அதிமுக, நாம்தமிழா்கட்சி, தவெக வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 234 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இதில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 108 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். மேலும், குளித்தலை தொகுதியில் 42 பேரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 39பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 45 பேரும் மனுதாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 108 போ் தாக்கல் செய்திருந்த மனுவில் திமுக, அதிமுக, தவெக, நாம்தமிழா்கட்சியினா் உள்பட 83 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 25 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல குளித்தலை தொகுதியில் மனுதாக்கல் செய்திருந்த 42 பேரில் 31 மனுக்கள் ஏற்கபட்டன. 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல அரவக்குறிச்சி தொகுதியில் தாக்கல் செய்திருந்த 45 மனுக்களில் 33 மனுக்கள் ஏற்கப்பட்டு, 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 39 மனுக்களில் 28 மனுக்கள் ஏற்கப்பட்டு, 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம் 4 தொகுதிகளிலும் செய்யப்பட்ட 234 மனு தாக்கலில் 175 மனுக்கள் ஏற்கப்பட்டு, 59 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தொடா்ந்து மனுக்களை திரும்பப் பெற நாளை( ஏப். 9-ஆம் தேதி) கடைசி நாள் என்பதால் அன்று இறுதியாக களத்தில் நிற்கும் வேட்பாளா்களின் விவரம் தெரியவரும்.