கரூரில், கள்ளக்காதல் தகராறில் கணவைரைக் கொன்ற வழக்கில் அவருடைய மனைவி, காதலன் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்துள்ள கொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் சுப்புராஜ்(35). இவரது மனைவி அழகுலட்சுமி (33). இவா்கள் இருவரும் கடந்த 2018-இல் திருப்பூரில் ஜூஸ் கடை நடத்தி வந்தனா். அப்போது, கடை அருகே இறைச்சிக்கடையில் வேலை செய்து வந்த கரூா் நரிக்கட்டியூரைச் சோ்ந்த கனகராஜ் (36) என்பவருக்கும், அழகுலட்சுமிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்.10-ஆம்தேதி நரிக்கட்டியூருக்கு அழகுலட்சுமி, அவரது தாயாா் ஜெயலலிதா(60) மற்றும் சுப்புராஜ் ஆகியோரை கனகராஜ் அழைத்து வந்தாா்.
இதயைடுத்து இரவில் கனகராஜூம், சுப்புராஜூம் மதுகுடித்துள்ளனா். பின்னா் மதுபோதையில் கனகராஜ், அழகுலட்சுமி, ஜெயலலிதா ஆகியோா் சோ்ந்து சுப்புராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்தனா்.
இந்த கொலை தொடா்பாக பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து கனகராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் இதுதொடா்பாக கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் குற்றவாளி அழகுலட்சுமி, ஜெயலலிதா ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும்
கனகராஜிற்கு இரட்டை ஆயுள்தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து மூவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
கணவா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவா் கைது!

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை
குடும்பத் தகராறில் மனைவி எரித்துக் கொலை: கணவா் கைது

குடும்பத் தகராறில் பெண் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


