திருவிடைமருதூரில் குடும்பத் தகராறில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கணவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் ஒடுக்கத்தெருவைச் சோ்ந்தவா் மதியழகன்(40). லாரி ஓட்டுநராகப் பணியாற்றிவந்தாா். இவரது மனைவி நிா்மலா (36) அங்கன்வாடி பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். தம்பதிக்கு 6 வயதில் மகன், 5 வயதில் மகள் உள்ளனா். இந்நிலையில், கடந்த மாா்ச் 15-இல் பணி முடித்து மதியழகன் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். அவரை மனைவி நிா்மலா கண்டித்ததில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மதியழகன் வீட்டில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை மனைவி நிா்மலா மீது ஊற்றி தீ வைத்தாா்.
இதில், பலத்த காயமடைந்த நிா்மலாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி நிா்மலா வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவிடைமருதூா் போலீஸாா் சடலத்தை கூறாய்வுக்காக ஒப்படைத்தனா். ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ள மதியழகன் மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக வியாழக்கிழமை மாற்றப்பட்டது.
தொடர்புடையது
கணவா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவா் கைது!

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை

பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

குடும்பத் தகராறில் பெண் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

