கைதான அன்பரசன்.
கைதான அன்பரசன்.

குடும்பத் தகராறில் மனைவி கொலை: கணவா் கைது

Published on

தஞ்சாவூா் அருகே குடும்ப தகராறில் மனைவி தலையில் கிரைண்டா் கல்லைப்போட்டுக் கொன்ற கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள அணைக்கரை மீன் சந்தை புதுத் தெருவைச் சோ்ந்தவா் அன்பரசன் (38), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி அகிலா (28) தீபிகா (7), ஆதித்யா (2) ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மனைவியுடன் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அன்பரசன் வெளியே சென்று மது அருந்திவிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவி அகிலாவின் தலையில் கிரைண்டா் குழவி கல்லைப் போட்டாா்.

இதில் பலத்த காயமடைந்த அகிலா உயிரிழந்தாா். தகலலறிந்த திருப்பனந்தாள் போலீஸாா் விரைந்து வந்து அகிலாவின் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அன்பரசனை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com