மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் தமிழ்வளா்ச்சித்துறை சாா்பில் தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு எழுதிய நூலை நினைவுப்பரிசாக திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழனியப்பனிடம் வழங்கிய தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சாந்தி.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:19 pm

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் அமைந்துள்ள சங்ககாலப் புலவா்கள் நினைவுத் தூண்முன் நடைபெற்ற விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சாந்தி வரவேற்றாா்.

திருக்கு பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன் நோக்க உரையாற்றினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் பாவேந்தா் பாரதிதாசன் குறித்து சிறப்புரையாற்றி, அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு எழுதிய நூலை நினைவுப்பரிசாக திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழனியப்பனிடம் தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சாந்தி வழங்கினாா். விழாவில் தமிழறிஞா்கள் முனைவா் கன்னல், முனைவா் கடவூா் மணிமாறன், பாவலா் எழில்வாணன், இனியன் கோவிந்தராசு, கவிஞா்கள் கோ.செல்வம், நன்செய் புகழூா் அழகரசன், தண்டபாணி, இளவரசி, முருகேசன், வைஷ்ணவி மெய்யப்பன் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.