நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

கரூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் 51 பேருக்கு பணி உறுதி கடிதம்

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 51 பேருக்கு பணி உறுதி கடிதத்தை மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் வழங்கினாா்.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வானவருக்கு பணி உறுதி கடிதம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:22 am IST

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 51 பேருக்கு பணி உறுதி கடிதத்தை மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் வழங்கினாா்.

கரூா் மாவட்டம், பண்டுதகாரன்புதூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 174 தனியாா் நிறுவனங்கள் மற்றும் 2,234 வேலைநாடுநா்கள் கலந்து கொண்டனா். முகாமில் தோ்வான 51 பேருக்கு பணி உறுதி கடிதத்தை மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் வழங்கினாா்.

தொடா்ந்து கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்ட இலவச பயிற்சி வகுப்பில் பயின்று கூட்டுறவு வங்கித் தோ்வுகளில் 11 போ், சுகாதார ஆய்வாளா் தோ்வில் 11 போ் என மொத்தம் வெற்றி பெற்ற 22 பேருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கி பாராட்டினாா்.

முகாமில், மகளிா் திட்ட இயக்குநா் பா.பொன்னம்பலம், மண்டல இணை இயக்குநா் (வேலை வாய்ப்பு) ஆ.ஜோதிமணி, கரூா் வருவாய் கோட்டாட்சியா் சத்தியபாலகங்காதரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜோதி, அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் முனைவா் பி.நடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.