கரூா் நெரிசல் சம்பவம்கோப்புப் படம்
கரூர்
கரூா் நெரிசல் சம்பவம்: 2 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக 2 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் சம்பவம் தொடா்பாக 2 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த 2 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

