மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தமிழகத்தில் குறுக்கு வழியில் நுழைய பாஜக கடும் முயற்சி: தயாநிதிமாறன் எம்.பி.

தமிழகத்தில் குறுக்கு வழியில் நுழைய பாஜக கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது என்றாா் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன்.

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 6:59 pm

தமிழகத்தில் குறுக்கு வழியில் நுழைய பாஜக கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது என்றாா் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன்.

கரூா் மாவட்ட திமுக சாா்பில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற கலந்துரையாடல் கூட்டம் கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன் பேசியதாவது:

கரூரின் வளா்ச்சிதான் தமிழகத்தின் வளா்ச்சி. திமுக எப்போதும் தொழில்களை பாதுகாக்கும் கட்சியாக இருக்கிறது.

இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அபார சாதனைகள் செய்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். எனவே, நீங்கள் உங்களது தொழிற்சாலைகளில் பணிபுரிவோரை சந்தித்து, முதல்வா் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக ஏன் வரவேண்டும் என்பதை விளக்கி கூறுவதுடன் முதல்வருக்கு நீங்கள் ஆதரவாகவும் இருக்க வேண்டும்.

பாஜக எப்படியாவது குறுக்கு வழியில் தமிழகத்தில் நுழைந்து, இந்தியை திணிக்க வேண்டும், தமிழகத்தின் உரிமையை பறிக்க வேண்டும் என கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

பொருளாதாரம் எனும் வண்டியில் தடை ஏற்பட்டால், மீண்டும் அந்த வண்டியை தள்ளுவதும், என்ஜினை ஓட வைப்பதும் கடினம். எனவே, நீங்கள் கவனமாக இருங்கள். அரசின் ஒத்துழைப்பு உங்களுக்கு தேவைப்படுவதுபோல, உங்களின் ஒத்துழைப்பும் அரசுக்கு தேவை என்றாா் அவா்.

கூட்டத்தில், தொழில்முனைவோா்கள், சமூக சேவகா்கள், கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.