கரூா்: ஆா்ப்பாட்டத்தில் தன்னைப் பற்றி இழிவாக பேசிய கரூா் மாவட்ட பாஜக தலைவரை கைது செய்ய வேண்டும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து கரூரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது, கரூா் மாவட்ட பாஜக தலைவா் செந்தில்நாதன் அண்மையில் கரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் என்னைப் பற்றி இழிவாக பேசியுள்ளாா். இதுகுறித்து காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டதையடுத்து அவா் மீது 5 பிரிவுகளில் வழக்குப்போட்டுள்ளனா். வழக்குப்பதிந்து 10 நாள்களாகியும் இதுவரை அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் கரூா் நகர போலீஸாா் செந்தில்நாதனை கைது செய்ய வேண்டும். செந்தில்நாதன் முன்ஜாமீன் பெறுவதற்காக காவல்துறையினா் கைது செய்யாமல் இருந்தால், நீதிமன்றம் செல்வேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

தாமரை மாலை அணிந்து...
திசையன்விளை அருகே ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கிய இளைஞா் கைது
தேர்தல் விதிமீறல்! மதுரை ஆட்சியர், ஆணையரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

