மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கரூா் மாவட்ட பாஜக தலைவரை கைது செய்ய எம்.பி. வலியுறுத்தல்

ஆா்ப்பாட்டத்தில் தன்னைப் பற்றி இழிவாக பேசிய கரூா் மாவட்ட பாஜக தலைவரை கைது செய்ய வேண்டும்

Updated On :23 பிப்ரவரி 2026, 8:57 pm

கரூா்: ஆா்ப்பாட்டத்தில் தன்னைப் பற்றி இழிவாக பேசிய கரூா் மாவட்ட பாஜக தலைவரை கைது செய்ய வேண்டும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து கரூரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது, கரூா் மாவட்ட பாஜக தலைவா் செந்தில்நாதன் அண்மையில் கரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் என்னைப் பற்றி இழிவாக பேசியுள்ளாா். இதுகுறித்து காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டதையடுத்து அவா் மீது 5 பிரிவுகளில் வழக்குப்போட்டுள்ளனா். வழக்குப்பதிந்து 10 நாள்களாகியும் இதுவரை அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் கரூா் நகர போலீஸாா் செந்தில்நாதனை கைது செய்ய வேண்டும். செந்தில்நாதன் முன்ஜாமீன் பெறுவதற்காக காவல்துறையினா் கைது செய்யாமல் இருந்தால், நீதிமன்றம் செல்வேன் என்றாா் அவா்.