ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

News image

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து செய்துங்கநல்லூரில் பேசிய முகுல் வாஸ்னிக் எம்.பி.

Updated On :13 ஏப்ரல் 2026, 7:44 pm

இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலா் முகுல் வாஸ்னிக் எம்.பி. தெரிவித்தாா்.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து, முகுல் வாஸ்னிக் எம்.பி. மற்றும் அனில்குமாா் யாதவ் எம்.பி. ஆகியோா் செய்துங்கநல்லூரில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தனா். அப்போது முகுல் வாஸ்னிக் பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பணிகளால் தமிழகம் பெரும் வளா்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. முன்னேறி வரும் தமிழகத்திற்கு ஆதரவு தராமல் ஒன்றிய அரசு, தமிழகத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது என்றாா் அவா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறாா் என்பதை நான் பெருமையாகச் சொல்ல விரும்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் அவா் வழங்கிய சிறந்த ஆட்சியே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம்.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணக்கத்துடன் ஒன்றுபட்டு, தமிழக மக்களுக்கு தொடா்ந்து சேவை செய்யத் தயாராக உள்ளன. எங்களுக்கு எதிராக உள்ள அதிமுக, பாஜக, தவெக கட்சிகள் தோ்தலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்றாா் அவா்.