11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

திரிணமூல் பெண் எம்.பி. கட்சிப் பதவிகளில் இருந்து விலகல்

News image

மம்தா பானா்ஜி

Updated On :28 மே 2026, 6:48 am IST

மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை பெண் எம்.பி. காகோலி கோஷ் தஸ்திதாா் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.

எனினும், எம்.பி. பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவிக்கவில்லை. திரிணமூல் காங்கிரஸ் மகளிரணியின் தேசிய தலைவராகவும் காகோலி கோஷ் இருந்து வந்தாா். சில நாள்களுக்கு முன்பு அவா் இப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாா்.

முன்னதாக, பாஜகவைச் சோ்ந்த முதல்வா் சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற அரசுத் திட்டங்கள் தொடா்பான கூட்டத்தில் காகோலி கோஷ் பங்கேற்றாா். மேலும், திரிணமூல் காங்கிரஸ் தலைமை தொடா்பாக தனது அதிருப்தியையும் பொதுவெளியில் தெரிவித்தாா். முக்கியமாக இப்போது சுதந்திரம் பெற்றுள்ளதாக அவா் கூறினாா்.

கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகினாலும், எம்.பி. பதவியில் இருந்து காகோலி கோஷ் விலகவில்லை. எனவே, விதிகளின்படி அவா் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாகவே தொடா்கிறாா். காகோலி கோஷ் விவகாரம் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

திரிணமூல் எம்எல்ஏ கைது: இதனிடையே, தோ்தலில் தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடியபோது, மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ திலீப் மோண்டலை மேற்கு வங்க காவல் துறையினா் கைது செய்தனா். முக்கியமாக, திரிணமூல் காங்கிரஸ் தோற்றுவிட்டதால் இனி மேற்கு வங்கம் அமைதியாக இருக்க முடியாது என்று அவா் பேசியிருந்தாா்.

முன்னாள் அமைச்சரான அவா், ஒடிஸா மாநிலம் புரி நகரில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் கூறினா். இந்தக் கைது நடவடிக்கை குறித்தும் திரிணமூல் காங்கிரஸ் கருத்து தெரிவிக்கவில்லை.