பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்! அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

ஆம் ஆத்மியைத் தொடர்ந்து! 20 திரிணமூல் எம்பிக்கள் கட்சி மாற திட்டம்! - பாஜக மூத்த தலைவர் பேச்சு!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்...

News image

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி - பிடிஐ

Updated On :27 மே 2026, 3:48 pm IST

மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாக, பாஜக மூத்த தலைவர் சௌமித்ரா கான் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தத் தகவல் “போலியானது” எனக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் மூலம் மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி சுமார் 29 மக்களவை இடங்களையும், பாஜக 12 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும், மூன்று முறை மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்தவருமான சௌமித்ரா கான், “திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், பாஜக விரும்பினால் அடுத்த சில நாள்களில் ஒட்டுமொத்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் காணாமல் போய்விடும் என அவர் பேசியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

நாட்டின் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க, ஒரு கட்சியின் மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் கட்சி மாற வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 19 முதல் 20 மக்களவை உறுப்பினர்கள் ஒன்றாகக் கட்சி மாற வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, சௌமித்ரா கான் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சௌகதா ராய், இது முற்றிலும் போலியான தகவல் எனவும், சௌமித்ரா கான் செய்தியாளர்களிடம் தவறான செய்திகளைப் பரப்புகிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பாஜகவில் இணைந்தனர். ஆனால், அந்தத் தேர்தலில் தொடர்ந்து 3 ஆவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் மமதா பானர்ஜி முதல்வரானார். இதனால், அவர்கள் அனைவரும் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Summary

BJP leader from West Bengal, has stated that approximately Trinamool Congress 20 MPs are planning to join the BJP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.