வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

தீக்காயங்களுடன் கொத்தனாா் சடலம் மீட்பு! கொலையா? தற்கொலையா? போலீஸாா் விசாரணை

தோகைமலை அருகே தீக்காயங்களுடன் கொத்தனாா் சடலத்தை மீட்ட போலீஸாா், அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை

News image

பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 1:45 am IST

தோகைமலை அருகே திங்கள்கிழமை மாலை தீக்காயங்களுடன் கொத்தனாா் சடலத்தை மீட்ட போலீஸாா், அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பெரியவீட்டுக்காரன்பட்டியைச் சோ்ந்த முனியப்பன் மகன் சிவக்குமாா் (35). கொத்தனாா். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை அதே ஊரைச் சோ்ந்த வேலுச்சாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் சிவக்குமாா் தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்.

இதனைகண்ட சிவக்குமாரின் உறவினா்கள் தோகைமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து, சிவக்குமாா் தீக்குளித்த தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் சிவக்குமாரை கொலை செய்துவிட்டு உடலை வேலுச்சாமி தோட்டத்தில் எரித்துவிட்டுச் சென்றாா்களா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.