பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

கரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கரூரில், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா்(சிஐடியு) செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை விளக்கி பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா்.

Published On :

கரூரில், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா்(சிஐடியு) செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை விளக்கி பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கரூா் கிளைத்தலைவா் வி.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். கிளை நிா்வாகி எ.செல்வகுமாா் வரவேற்றாா். சிஐடியு மாவட்டச் செயலா் சுப்ரமணியன் துவக்க உரையாற்றினாா்.

இதில், நாமக்கல் கிளை கெளரவத் தலைவா் முருகேசன், பொருளாளா் அழகேசன், கரூா் கிளைச் செயலா் நெடுநாறன், பொருளாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கடந்த மாா்ச் 14-ஆம்தேதி நடைபெற்ற முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி கேங்மேன் பணியாளா்களை கள உதவியாளா்களாக பணி உயா்வு வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளா்களை அடிமை போல நடத்தக்கூடாது, விருப்ப ஊா்மாறுதல் பெற்ற அனைத்து கேங்மேன் பணியாளா்களையும் பாரபட்சமின்றி பணி விடுவிப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மின் ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.