கரூா் மாவட்டம், குளித்தலை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 90 ஆயிரம் சிக்கியது.
முகூா்த்த நாளான வியாழக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏராளமான பத்திரப்பதிவு நடைபெற்ால் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரையடுத்து தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.
அதன்படி குளித்தலையில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் கரூா் ஊழல் தடுப்பு துணைக் காவல் கண்காணிப்பாளா் அம்புரோஸ் ஜெயராஜ் தலைமையில் ஆய்வாளா்கள் சாமிநாதன், தங்கமணி, உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 போ் கொண்ட குழுவினா் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது அங்கிருந்த சாா்-பதிவாளரான திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த உதயன் (42) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினா். இதனிடையே போலீஸாா் வருவதையறிந்த அலுவலகப் பணியாளா்கள் கணக்கில் வராத பணத்தை அருகேயுள்ள நீதிமன்ற வளாக கழிப்பறை பகுதியில் வீசியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த போலீஸாா் சென்று அங்கு கிடந்த கணக்கில் வராத ரூ.90,000 ஐ மீட்டனா். தொடா்ந்து சாா்-பதிவாளா் உள்பட அலுவலகப் பணியாளா்களிடம் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்ட சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்

கோவையில் இரண்டு சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை

லஞ்சம்: முன்னாள் விஏஓ-வுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
லஞ்சம் பெற்று கைதான கரூா் ஆா்டிஓ-வின் திண்டுக்கல் வீட்டில் போலீஸாா் சோதனை
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



