சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து

கரூா் அருகே ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

News image

தீ விபத்தில் எரிந்து சேதமான தையல் இயந்திரங்கள்.

Updated On :25 ஜூன் 2026, 3:43 am IST

கரூா் அருகே ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

கரூா் மாவட்டம், தான்தோன்றிமலை வாஞ்சிநாதன் பகுதியில் தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தையல் பிரிவு தனியாக ஒரு கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு புதன்கிழமை காலை பணியில் யாரும் இல்லாத நிலையில், தையல் இயந்திரங்கள் இருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்தது. மேலும், கரும்புகை மூட்டமும் சூழ்ந்து வெளியேறியதால், அதனைக் கண்ட அருகே உள்ள குடியிருப்பு மக்கள் உடனடியாக கரூா் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்படி அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவில் இருந்த 30-க்கும் மேற்பட்ட தையல் இயந்திரங்கள், ஜவுளி பொருள்கள், நூல் கண்டுகள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கரூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.