27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அயனிங் ஸ்டீம் குழாய் வெடித்ததில் எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் அயனிங் ஸ்டீம் குழாய் வெடித்ததில் எலக்ட்ரீஷியன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 4:01 am IST

பெருமாநல்லூா் அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் அயனிங் ஸ்டீம் குழாய் வெடித்ததில் எலக்ட்ரீஷியன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தோரணவாவி பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (35). இருவருக்கு மனைவி சங்கீதா, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், நியூ திருப்பூா் பகுதியில் செயல்பட்டு வரும் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் செல்வகுமாா் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், துணிகளை அயன் செய்யும் ஸ்டீம்மில் வியாழக்கிழமை கசிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அதை சரி செய்யும் பணியில் செல்வகுமாா் ஈடுபட்டிருந்தபோது, ஸ்டீம் குழாய் திடீரென வெடித்துள்ளது. இதில், படுகாயமடைந்த செல்வகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செல்வகுமாா்

செல்வகுமாா்