வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஆண் குழந்தை உயிரிழப்பு

தந்தை தவறி மேலே விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:54 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தந்தை தவறி மேலே விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலம் அருகேயுள்ள பாதிராபுலியூா், பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதா். இவரது மனைவி அம்பிகா. இத்தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னா் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு தீக்ஷிதன் எனப் பெயா் சூட்டியிருந்தனா்.

இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி அம்பிகா தனது குழந்தையுடன் வீட்டில் தரையில் படுத்தும், ஸ்ரீதா் கட்டிலில் படுத்தும் உறங்கியுள்ளனா். இந்நிலையில், ஸ்ரீதா் நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் கால் இடறி கீழே படுத்துறங்கிய தீக்ஷிதன் மேலே விழுந்து விட்டாராம். இதில் குழந்தைக்கு மூச்சித் தினறல் ஏற்பட்டது.

இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா் சிகிச்சையில் இருந்து வந்த குழந்தை தீக்ஷிதன், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.