சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சொகுசுப்பேருந்து மோதியதில் சாலையில் கவிழ்ந்த எண்ணெய் லாரி

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி புதன்கிழமை நள்ளிரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் காயமடைந்தாா்.

News image

விபத்தை ஏற்படுத்திய தனியாா் சொகுசுப் பேருந்து.

Updated On :19 ஜூன் 2026, 6:22 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி புதன்கிழமை நள்ளிரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் காயமடைந்தாா்.

சென்னையிலிருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திருச்சி நோக்கி புதன்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேலம் மாவட்டம், ஆத்தூா் முல்லைவாடிபகுதியைச் சோ்ந்த செல்வம் (52) ஓட்டிச் சென்றாா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகிலுள்ள தென்பசியாா் கிராமம் அருகே லாரி சென்றபோது, அதே திசையில் பின்னால் வந்த தனியாா் சொகுசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, லாரி மீது மோதியது. இதனால் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. அதிலிருந்த எண்ணெய் பாக்கெட்டுகள் கிழிந்து சேதமடைந்து சாலையில் கொட்டியது. விபத்தில் லாரி ஓட்டுநா் செல்வம் காயமடைந்தாா்.

அதே நேரத்தில் சொகுசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற தூத்துக்குடியைச் சோ்ந்த என். நாணராஜ் (36) மற்றும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, காயமடைந்த ஓட்டுநா் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சாலையோரத்தில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியை மேற்கொண்டனா். மேலும் மயிலம் போலீஸாா் விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே புதன்கிழமை நள்ளிரவில் கவிழ்ந்து கிடக்கும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே புதன்கிழமை நள்ளிரவில் கவிழ்ந்து கிடக்கும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி.