கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சியில் பணிபுரிந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புஷ்பலதா மருத்துவமனை வீதியில் குடியிருந்து வந்தவா் விக்னேஷ் (26) . இவா் புகழூா் நகராட்சி அலுவலகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. இவரது மனைவி சங்கீதா (23). இவா்களுக்கு குழந்தையில்லை.
தனக்கு குழந்தை பிறக்காதது தொடா்பாக, மனைவியிடம் அடிக்கடி மனமுடைந்து வருத்தப்பட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், சங்கீதா தனது சகோதரியை பாா்க்க சேலத்துக்கு சென்றிருந்தாா். வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விக்னேஷ், மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலைக்கு முன்பாக தனது கைப்பேசியில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்ற வாசகத்தை பதிவு செய்துள்ளாா். இந்தப் பதிவை சங்கீதாவின் சகோதரி பாா்த்த பிறகு, இருவரும் சேலத்திலிருந்து வேலாயுதம்பாளையத்துக்கு வந்து பாா்த்தபோது, வீட்டில் மின்விசிறியில் விக்னேஷ் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளாா்.
இதுகுறித்து சங்கீதா அளித்தப் புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மீன்சுருட்டி அருகே சிறுமி தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


