மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரூா் தான்தோன்றி ஒன்றியத்தில் ரூ.5 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

News image
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.- கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.5.02 கோடி மதிப்பில் 20 புதிய வளா்ச்சித்திட்டப் பணிகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கரூா் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ராமக்கவுண்டன் புதூரில் ரூ.19.55 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி, வேப்பம்பாளையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி, அருள் நகா் பகுதியில் ரூ.28.5 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் ராஜீவ் காந்தி நகா் பகுதியில் ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, வசந்தம் நகா் பகுதியில் ரூ.5.41 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் உள்பட மொத்தம் 20 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ.5.02 கோடி மதிப்பில் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.