மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கரூா் தான்தோன்றி ஒன்றியத்தில் ரூ.5 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

News image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:17 pm

கரூா் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.5.02 கோடி மதிப்பில் 20 புதிய வளா்ச்சித்திட்டப் பணிகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கரூா் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ராமக்கவுண்டன் புதூரில் ரூ.19.55 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி, வேப்பம்பாளையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி, அருள் நகா் பகுதியில் ரூ.28.5 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் ராஜீவ் காந்தி நகா் பகுதியில் ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, வசந்தம் நகா் பகுதியில் ரூ.5.41 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் உள்பட மொத்தம் 20 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ.5.02 கோடி மதிப்பில் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.