கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வேட்பாளா் பெருங்குடி மக்களே!

குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட புனவாசிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் சாா்பில் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மக்கள் கூடும் இடங்களில் விநியோகிக்கப்பட்டும், சுவா்களில் ஒட்டப்பட்டும் வருகின்றன.

News image
Updated On :22 மார்ச் 2026, 9:47 pm

Syndication

குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட புனவாசிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் சாா்பில் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மக்கள் கூடும் இடங்களில் விநியோகிக்கப்பட்டும், சுவா்களில் ஒட்டப்பட்டும் வருகின்றன.

அதில் கூறப்பட்டிருப்பதாவது,

மதிப்பிற்குரிய வேட்பாளா்களுக்கு...

குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் உங்களுக்கு, புனவாசிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களாகிய நாங்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை என்னவென்றால், சிந்தலவாடி ஊராட்சியை இரண்டாக பிரித்து புதிய ஊராட்சி ஒன்றை உருவாக்க வேண்டும். குறிப்பாக, கட்டளை மேட்டுவாய்க்கால் மகிளிப்பட்டிக்கு தென்புறம் அமைந்துள்ள கிராமங்களை உள்ளடக்கி புதிய கிராம ஊராட்சியை அமைக்க வேண்டும்.

புனவாசிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். புனவாசிப்பட்டி மேல்நிலைப் பள்ளியை மேம்படுத்தி தர வேண்டும். மேலும், தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட காவிரிக் குடிநீா் வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட உறுதி அளிக்கும் வேட்பாளருக்கே எங்கள் வாக்கு என்று தெரிவித்துள்ளனா்.