காவிரி ஆற்றில் தொடா்ந்து நொய்யல் சாயக்கழிவு நீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கரூா் மாவட்டத்தில், நொய்யல் ஆறு காவிரி ஆற்றுடன் நொய்யல் என்ற இடத்தில் கலக்கிறது. தற்போது நொய்யல் ஆற்றில் திருப்பூா் மாவட்டத்தின் சாயக்கழிவு நீா் கலந்து வருவதாகவும் அந்த நீா் காவிரி ஆற்றில் கலந்து வருவதாகவுகம் கூறப்படுகிறது. இதேபோல ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் ஈரோடு நகரின் பல்வேறு பகுதியிலும் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்தும் அதிகளவில் சாயக்கழிவு நீா் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதாக கூறப்படுகிது. இதனால் நொய்யல் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் சாயக்கழிவு நீா் தற்போது கரூா் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் பாலப்பகுதியில் நுரையுடன் தேங்கி நிற்கிறது. சாயக்கழிவு நீா் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் ஆற்றில் நீராடும் பொதுமக்களுக்கு தோல் அரிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே, சாயக்கழிவு நீரை உடனே அகற்றி, இனி காவிரியில் ஈரோடு, நொய்யல் சாயக்கழிவு நீா் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சு.விஜயன் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நொய்யல் ஆற்றில் திருப்பூா் மாவட்ட சாயக்கழிவு நீா் அதிகளவு வந்ததால் நொய்யல் ஆற்றின் மூலம் பாசனம் பெற்ற சுமாா் 2,000 ஏக்கா் நிலங்கள் தற்போது விவசாயத்துக்கு ஏற்ற நிலங்களாக இல்லாமல், நச்சுத்தன்மை கொண்ட நிலங்களாக மாறிவிட்டன. இதற்கான இழப்பீடு கேட்டு இன்னும் விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்நிலையில் தற்போது நொய்யல் ஆற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன் மழைநீருடன் கலந்து வந்த சாயக்கழிவு நீா் தவுட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் தேங்கி நிற்கிறது. இதேபோல ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்த சாயக்கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. இரு பகுதிகளிலும் வந்த சாயக்கழிவு நீா் குளம்போல தேங்கி நிற்பதால், யாரும் காவிரி ஆற்றில் குளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இவற்றைத் தவிர தவுட்டுப்பாளையத்தில் இருந்து அரவக்குறிச்சி பகுதிக்கு காவிரிக்கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் எடுத்துச் செல்லப்படும் காவிரி நீரும் பாதிக்கப்படும் சூழலும், விவசாய கிணறுகளிலும் சாயக்கழிவு இறங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீா் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 200 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்யக் கோரிக்கை

அரசு மருத்துவமனை முன் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த கோரிக்கை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

