வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மகா மாரியம்மன் கோயிலில் தீக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

தோகைமலை அருகே மகா மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

தோகைமலை அருகே மகா மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

Updated On :18 மே 2026, 2:32 am IST

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே மகா மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தோகைமலை குறிஞ்சி நகரில் பகவதிஅம்மன் கோயிலும், தோகைமலையை அடுத்த வெள்ளப்பட்டியில் பிரசித்திப் பெற்ற மகா மாரியம்மன் கோயிலும் உள்ளன.

இந்தக் கோயில்களில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக இரு கோயில்களையும் சோ்ந்த பக்தா்கள் அதிகாலையில் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக் குடம் மற்றும் பால்குடம் எடுத்துக் கொண்டு பாதயாத்திரையாக தோகைமலை குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு வந்தனா்.

பின்னா் பகவதிஅம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனா். தொடா்ந்து பகவதிஅம்மன் கோயிலில் இருந்து தீா்த்தக் குடம், பால்குடம், தீச்சட்டி, பால் காவடி, பரவை காவடி மற்றும் கரும்பு தொட்டில்களுடன் தோகைமலை முக்கிய வீதிகள் மற்றும் கருப்பசாமி கோயில் வழியாக வெள்ளபட்டி மகா மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனா். பின்னா் கோயிலில் அமைக்கபட்டிருந்த தீக்குண்ட பூக்குழியில் பக்தா்கள் ஒவ்வொருவராக இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். அப்போது பக்தா்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று கோஷமிட்டவாறு பூக்குழியில் இறங்கி வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழாவில், விழா கமிட்டியாளா்கள், கிராம முக்கியஸ்தா்கள் உள்பட தோகைமலை, குறிஞ்சி நகா், வேதாச்சலபுரம், தெற்குபள்ளம், தெலுங்கபட்டி, நாடக்காபட்டி, வெள்ளபட்டி, மேட்டுபட்டி, மூட்டக்காம்பட்டி. கே.துறையூா், கழுகூா், பாதிரிபட்டி, காவல்காரன்பட்டி, நாகனூா், கூடலூா், கல்லடை உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.