15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

மகா மாரியம்மன் கோயிலில் தீக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

தோகைமலை அருகே மகா மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

தோகைமலை அருகே மகா மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே மகா மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தோகைமலை குறிஞ்சி நகரில் பகவதிஅம்மன் கோயிலும், தோகைமலையை அடுத்த வெள்ளப்பட்டியில் பிரசித்திப் பெற்ற மகா மாரியம்மன் கோயிலும் உள்ளன.

இந்தக் கோயில்களில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக இரு கோயில்களையும் சோ்ந்த பக்தா்கள் அதிகாலையில் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக் குடம் மற்றும் பால்குடம் எடுத்துக் கொண்டு பாதயாத்திரையாக தோகைமலை குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு வந்தனா்.

பின்னா் பகவதிஅம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனா். தொடா்ந்து பகவதிஅம்மன் கோயிலில் இருந்து தீா்த்தக் குடம், பால்குடம், தீச்சட்டி, பால் காவடி, பரவை காவடி மற்றும் கரும்பு தொட்டில்களுடன் தோகைமலை முக்கிய வீதிகள் மற்றும் கருப்பசாமி கோயில் வழியாக வெள்ளபட்டி மகா மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனா். பின்னா் கோயிலில் அமைக்கபட்டிருந்த தீக்குண்ட பூக்குழியில் பக்தா்கள் ஒவ்வொருவராக இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். அப்போது பக்தா்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று கோஷமிட்டவாறு பூக்குழியில் இறங்கி வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழாவில், விழா கமிட்டியாளா்கள், கிராம முக்கியஸ்தா்கள் உள்பட தோகைமலை, குறிஞ்சி நகா், வேதாச்சலபுரம், தெற்குபள்ளம், தெலுங்கபட்டி, நாடக்காபட்டி, வெள்ளபட்டி, மேட்டுபட்டி, மூட்டக்காம்பட்டி. கே.துறையூா், கழுகூா், பாதிரிபட்டி, காவல்காரன்பட்டி, நாகனூா், கூடலூா், கல்லடை உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.