கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தூக்கிட்டு பெண் சாவு: கோட்டாட்சியர் விசாரணை

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் அருகேயுள்ள அசூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மனைவி திவ்யா (23). இத்தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்

News image
Updated On :20 அக்டோபர் 2017, 1:56 am

DIN

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் அருகேயுள்ள அசூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மனைவி திவ்யா (23). இத்தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி முகேஷ், சஞ்சய் என  2 மகன்கள் உள்ளனர். மேலும், திவ்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், வரதராஜன் தந்தை முத்துசாமிக்கும், திவ்யாவுக்கும் இடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாம்.
இதனால் மனமுடைந்த திவ்யா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.
தகவலறிந்த குன்னம் போலீஸார் அங்குசென்று, அவரது சடலத்தை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை முருகேசன் அளித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும், திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் வரதட்சிணை கொடுமையால் திவ்யா தற்கொலை செய்துகொண்டாரா என வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.