காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிப்பது, ஏரி, குளங்களை தூர்வார மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும். கடன் தள்ளுபடியை நிறுத்தி, விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டும். ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 40, பருத்திக்கு ரூ. 60, கரும்பு டன்னுக்கு ரூ. 6,000 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இந்த மறியல் நடைபெற்றது.
அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம் தலைமையில் மறியல் செய்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்டத் தலைவர் மூ. மணியன், வேப்பூர் ஒன்றிய செயலர் மதியழகன் உள்ளிட்ட 3 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: கரூா் மாவட்டத்தில் 92.21 போ் சதவீதம் தோ்ச்சி

அஷ்மிதா, மாளவிகா, தேவிகா வெற்றி

திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக ரூ. 350 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: திருச்சி எம்பி துரை வைகோ பேட்டி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 97.31% தோ்ச்சியுடன் திருச்சி 4-ஆம் இடம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


