தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

காவிரி மேலாண்மை வாரியம் கோரி மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:33 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிப்பது, ஏரி, குளங்களை தூர்வார மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும். கடன் தள்ளுபடியை நிறுத்தி, விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டும். ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 40, பருத்திக்கு ரூ. 60, கரும்பு டன்னுக்கு ரூ. 6,000 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இந்த மறியல் நடைபெற்றது. 
அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம் தலைமையில் மறியல் செய்த  தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்டத் தலைவர் மூ. மணியன், வேப்பூர் ஒன்றிய செயலர் மதியழகன் உள்ளிட்ட 3 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.