ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கல்லூரிப் பேருந்து வயலில் இறங்கி  7 மாணவர்கள் காயம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே புதன்கிழமை தனியார் கல்லூரிப் பேருந்து வயலில் இறங்கி 7 மாணவர்கள் காயமடைந்தனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:48 am

DIN

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே புதன்கிழமை தனியார் கல்லூரிப் பேருந்து வயலில் இறங்கி 7 மாணவர்கள் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம், தொழுதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இங்குள்ள மாணவர்கள் நாள்தோறும், கல்லூரி பேருந்தில் சென்று வருவர். இந்நிலையில், புதன்கிழமை காலை சுமார் 30 மாணவர்களுடன் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து, கீழப்பெரம்பலூர் அருகே ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த வயலில் இறங்கியது
இதில், பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்களான விஜய், சரிதா, கஸ்தூரி, புனிதவதி, பூவரசன், தர்மதுரை ராயப்பன் ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்த குன்னம் போலீஸார் மாணவ, மாணவிகளை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் வழக்குப் பதிந்து, கல்லூரி பேருந்து ஓட்டுநர் மாரிமுத்துவை கைது செய்து விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.