நாளை அம்மா திட்ட முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 23) நடைபெறுகிறது.
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 23) நடைபெறுகிறது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் (தெ), குன்னம் வட்டம், பேரளி (தெ), ஆலத்தூர் வட்டம், ஆதனூர் (தெ) ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இங்கு பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்படும். உடனடியாக தீர்வுகாண இயலாத விண்ணப்பங்கள் குறித்து மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும். எனவே, சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com