அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அயினாபுரம்  மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகேயுள்ள அயினாபுரம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :9 ஜூலை 2018, 2:51 am

DIN

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகேயுள்ள அயினாபுரம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் அருகேயுள்ள அயினாபுரம் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நடத்துவது என கிராம மக்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 15 நாள்களுக்கு முன்பு பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது. பின்னர், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட அன்னம், சிம்மம், மயில், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, மங்கள இசை முழங்க அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாடாலூர், அயினாபுரம், திருவிளக்குறிச்சி, ஆலத்தூர் கேட் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைகிறது. விழா  ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.