வேளாண் கல்லூரிகளுக்குகிடையே மாநில அளவிலான பல்திறன் போட்டிகளில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரியில் மாநில அளவில், வேளாண் கல்லூரிகளுக்குகு இடையேயான பல்திறன் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேளாண்
கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் பங்கேற்ற பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி இளங்கலை முதலாமாண்டு மாணவர் ராமகிருஷ்ணன், மாணவி யுவப்ரியா ஆகியோர் வினாடி- வினா போட்டியிலும், மிஸ்டரி ஹன்ட் போட்டியில் மாணவர்கள் சஞ்சீவ், சிவசங்கரன் ஆகியோரும் முதலிடம் பெற்றனர்.
பேஸ்டர் ப்ரெசெண்டேஷன் போட்டியில் மாணவிகள் லோகநாயகி, யுவபிரியா ஆகியோர் இரண்டாமிடமும், தனிநபர் நடனப் போட்டியில் மாணவர் தினேஷ் இரண்டாமிடமும், தனிநபர் பாட்டுப் போட்டியில் மாணவர் ராமகிருஷ்ணன் மூன்றாமிடமும் பெற்றனர். மேலும், கல்லூரிகள் வாரியான தர வரிசையில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மூன்றாமிடத்தை பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன், புதன்கிழமை பாராட்டி பரிசு வழங்கினார். கல்லூரி டீன் கீதா உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.