அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

லாடபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்

பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ தனவாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.

News image
Updated On :14 மே 2018, 10:44 pm

DIN

பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ தனவாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.
விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் சார்பில் பூ போடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. முன்னதாக மாலை 3 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிருந்து பூஜை பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு தினைமலை வரதராஜப் பெருமாள் கோயிலில் விஷேச பூஜைகள் நடைபெற்றன.   தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு பூஜைகள், பல்வேறு வாகனங்களில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான தனவாரியம்மன் கோயில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ஜூன் 6 ஆம் தேதி காலை நடைபெறுகிறது.  ஜுன் 7 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் கோயில் திருவிழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.