மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

லாடபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்

பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ தனவாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.

Updated On :14 மே 2018, 10:44 pm

பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ தனவாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.
விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் சார்பில் பூ போடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. முன்னதாக மாலை 3 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிருந்து பூஜை பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு தினைமலை வரதராஜப் பெருமாள் கோயிலில் விஷேச பூஜைகள் நடைபெற்றன.   தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு பூஜைகள், பல்வேறு வாகனங்களில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான தனவாரியம்மன் கோயில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ஜூன் 6 ஆம் தேதி காலை நடைபெறுகிறது.  ஜுன் 7 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் கோயில் திருவிழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.