வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திறன் மேம்பாட்டு பயிற்சி விழிப்புணர்வு பிரசார ஊர்தி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறன் மேம்பாடு பயிற்சி - விழிப்புணர்வு' நடமாடும் ஊர்தியை திங்கள்கிழமை தொடக்கி வைத்து பார்வையிட்டார் ஆட்சியர் வே. சாந்தா.

Updated On :14 மே 2018, 10:43 pm

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறன் மேம்பாடு பயிற்சி - விழிப்புணர்வு' நடமாடும் ஊர்தியை திங்கள்கிழமை தொடக்கி வைத்து பார்வையிட்டார் ஆட்சியர் வே. சாந்தா.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், கிராமப்புற மாணவர்களுக்கு அளிக்கப்படும் திறன் மேம்பாடு பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் அதிநவீன எல்.இ.டி. வாகனம் மூலம் கிராமங்கள்தோறும் திரையிடப்பட உள்ளன.
மாவட்ட ஆட்சியரகத்தில் விழிப்புணர்வு ஊர்தியைத் தொடக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார் ஆட்சியர் வே. சாந்தா.
நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) பெ. மணிவேல், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் உதயசங்கர், மஞ்சுளாதேவி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.