பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் பி. மஞ்சுளாதேவி, அரியலூர் அரசு தொழில்பயிற்சி நிலைய முதல்வர் கே.எஸ்.கற்பகம் ஆகியோர் தனித்தனியாக வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 3 பணிமனை உதவியாளர், 2 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிமனை உதவியாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ, என்.டி.சி, என்.ஏ.சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மின்சார பணியாளர் தொழில் பிரிவுக்கு பொதுப்பிரிவு முன்னுரிமை பெற்றவர்களும், பொருத்துநர் தொழில்பிரிவுக்கு ஆதரவற்ற விதவை பெண்களுக்கு முன்னுரிமையும், இயந்திர வேலையாள் தொழில்பிரிவுக்கு பொதுப்பிரிவு முன்னுரிமை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆலத்தூர் அரசினர் தொழில் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அல்லது 04328-267555 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அரியலூர் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிமனை உதவியாளர் பணியிடத்துக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐடிஐ-யில் மோட்டார் மெக்கானிக் முடித்திருக்க வேண்டும். 2018 ஜூலை 1ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் செப்.14ஆம் தேதிக்குள் முதல்வர், அரசு தொழில் பயிற்சி நிலையம், அரியலூர் 621 704 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நிலைய 04329-228408 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

படிப்பு மட்டும் போதுமா?செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி! 20 பேர் காயம்!

பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! மோடி பேச்சுக்கு காங்கிரஸ் பதில்!

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

