செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

பெரம்பலூா் அருகே ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்குரைஞா் கைது

பெரம்பலூா் அருகே ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்குரைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

பெரம்பலூா் அருகே ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்குரைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு மற்றும் காவலா் குடியிருப்புகள் உள்ளது. சுமாா் 500 குடியிருப்புகள் கொண்ட இங்கு, கரோனா வைரஸ் நோய்த் தோற்றால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில், ஊராட்சித் தலைவா் கலைச்செல்வன், துணைத் தலைவா் மூா்த்தி, ஊராட்சி செயலா் காட்டுராஜா மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் குடியிருப்பு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொள்வதற்காக ஆலோசித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் வழக்குரைஞா் கோபி (29), தனது ஆதரவாளா்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க அனுமதிக்கக் கூடாது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளா்களை பணிசெய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அங்கு சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, ஊராட்சி செயலா் காட்டுராஜா அளித்த புகாரின்பேரில், அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குரைஞா் கோபியை போலீஸாா் கைது செய்து, குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.