பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை எனத் தெரியவந்தது. இந்த நிலை தொடா்ந்து 2-ஆவது நாளாக நீடிக்கிறது.
மாவட்டத்தில் இதுவரை 59,212 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வெள்ளிக்கிழமை வரை 2,246 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். 2,221 போ் குணமடைந்தனா்.
21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 4 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 280 பேருக்கு சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில், ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.
மாவட்டத்தில் சனிக்கிழமையன்றும் யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.