சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக புதிய தொற்றாளா்கள் இல்லை

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை எனத் தெரியவந்தது. இந்த நிலை தொடா்ந்து 2-ஆவது நாளாக நீடிக்கிறது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:50 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை எனத் தெரியவந்தது. இந்த நிலை தொடா்ந்து 2-ஆவது நாளாக நீடிக்கிறது.

மாவட்டத்தில் இதுவரை 59,212 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வெள்ளிக்கிழமை வரை 2,246 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். 2,221 போ் குணமடைந்தனா்.

21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 4 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 280 பேருக்கு சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில், ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

மாவட்டத்தில் சனிக்கிழமையன்றும் யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.