புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொழிலாளா் நல நிதியைச் செலுத்த அறிவுறுத்தல்

பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள், தங்களது தொழிலாளா் நல நிதியை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:48 pm

DIN

பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள், தங்களது தொழிலாளா் நல நிதியை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் நல ஆய்வாளா் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழிலாளா் நல நிதி சட்டத்தின்படி, பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களிலுள்ள தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், அவரது பங்குத் தொகையாக ரூ. 10 மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து, வேலை அளிப்பவா் பங்காக ரூ. 20 சோ்த்து 2020- ஆம் ஆண்டின் பங்குத் தொகையான தொழிலாளா் நல நிதியை செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நல நிதிவாரியம் என்ற பெயருக்கு டி.டி எடுத்து செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், டி.எம்.எல் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை- 600006 என்ற முகவரிக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் இணையதளம் வாயிலாகவும் செலுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.