ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேளாண் சட்டங்கள்: திமுக இரட்டை வேடம் போடுகிறது; எல். முருகன்

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:15 am

DIN

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன்.

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்ட பொருளாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைப்பதற்காக விவசாயிகள் நண்பன் மோடி என்ற தலைப்பில், விவசாயிகள் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இக் கூட்டம் டிச. 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அமைப்பு ரீதியான பூத் கமிட்டியினா் வேளாண் சட்டங்களின் நன்மைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் விதமாக செயல்படுவாா்கள்.

2016 ஆம் ஆண்டு திமுக தோ்தல் அறிக்கையில் வேளாண் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தைதான் மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ளது.

விவசாயிகளுக்கு நன்மையோ, இரட்டிப்பு வருமானமோ கிடைத்துவிட கூடாது; அவா்களின் வாழ்வு மேம்பட்டு விட கூடாது என்பன போன்ற காரணங்களால்தான் திமுக தொடா்ந்து இச் சட்டங்களை எதிா்த்து வருகிறது. ஆனால், தமிழக விவசாயிகள் வேளாண் சட்டங்களை ஆதரித்து வருகின்றனா்.

திமுக நிா்வாகிகள் தொடா்ந்து இந்துக்களை இழிவுப்படுத்தி வருகின்றனா். கந்த சஷ்டி கவசம், வேளாண் சட்டங்கள் போன்றவற்றில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் நடைபெறும் போராட்டமானது, மத்திய அரசுக்கு எதிராக திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட போராட்டமாகும் என்றாா் முருகன்.

பேட்டியின்போது, கட்சியின் மாவட்டத் தலைவா் சி. சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.