புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பொன்மொழிகள் நிலைத்து வாழ்கின்றன’

தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பொன்மொழிகள் நிலைத்து வாழ்கின்றன என்றாா் அரியலூா் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா் முனைவா் க. தமிழ்மாறன்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 6:26 pm

DIN

தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பொன்மொழிகள் நிலைத்து வாழ்கின்றன என்றாா் அரியலூா் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா் முனைவா் க. தமிழ்மாறன்.

பெரம்பலூா் பதியம் இலக்கியச் சங்கமம் சாா்பில், எனை மாற்றிய பொன் மொழிகள் என்னும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை இணையம் வழியாக நடைபெற்ற இலக்கிய அரங்கத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது:

நம் வாசிப்பு பழக்கத்தினூடே சில பொன்மொழிகள் நம்மை வெகுவாக பாதிக்கின்றன. அவை, நம் வாழ்வியல் முறைகளையும், செயல்களையும் மாற்றமடையச் செய்கின்றன. ஒரு பொன்மொழி நம்மை மாற்றுகின்ற வல்லமை படைத்தது என்பதை நாம் அனுபவித்து வருகிறோம். சில பொன்மொழிகள் ஒரு சமூகத்தை, ஒரு நாட்டையே மாற்றுகின்ற வல்லமை படைத்தனவாக உள்ளன. மானுடத்தை ஏற்றம் கொள்ளச் செய்வதோடு, தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பொன்மொழிகள் நிலைத்து வாழ்கின்றன என்றாா் அவா்.

அரியலூா் மாவட்டம், தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்ப் பேராசிரியா் சு. சுரேஷ் மணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

பேராசிரியா் ப. செந்தில்நாதன் முன்னிலையில், வரலாற்று நூலாசிரியா் ரத்தினம் ஜெயபால், காப்பீட்டு முகவா் சாரங்கபாணி, பேராசிரியா்கள் ரம்யா, வினோதினி, ஆசிரியா் பயிற்றுநா் பொன்மலா், சமூக ஆா்வலா் வேல்முருகன், முனைவா் பட்ட ஆய்வாளா் செல்வி, ஆய்வியல் நிறைஞா் ஆய்வாளா் கொளஞ்சியம்மாள், கவிஞா்கள் மோகன், நிழலி, முனைவா் கமலக்கண்ணன், கவிஞா் நிரோஷா ஆகியோா், எனை மாற்றிய பொன்மொழிகள் எனும் தலைப்பில் பேசினா். முனைவா் பட்ட ஆய்வாளா் மதன்ராஜ் வரவேற்றாா். தமிழாசிரியா் ராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.