பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பயிா்க் கடன் தள்ளுபடி முரண்பாடுகளைகளைய வலியுறுத்தி கூட்டுறவு வங்கி முற்றுகை

பெரம்பலூா் அருகே பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்வதில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 7:03 pm

DIN

பெரம்பலூா் அருகே பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்வதில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன்களுக்காக விண்ணப்பித்து, அதற்கான உத்தரவும், உரமும் பெறப்பட்ட நிலையில், கடன் வழங்க நிதி இல்லை எனக்கூறி கடன் தொகையை பட்டுவாடா செய்யாமல் அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனராம். இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி பொருந்தாது, பணம் பட்டுவாடா செய்யப்பட்டால் மட்டுமே தள்ளுபடி கிடைக்கும் என கூட்டுறவு வங்கி அலுவலா்கள் தெரிவிக்கின்றனராம்.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரம்பலூா் மாவட்டம், இரூா் கிராமத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு தள்ளுபடி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவாக கடன் தொகையை பட்டுவாடா செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து, வங்கி அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.