தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

ஜெய் பீம் படக்குழுவினா் மீது நடவடிக்கை கோரி பாமக-வினா் புகாா்

ஜெய் பீம் திரைப்படக் குழுவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணியிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:48 pm

DIN

ஜெய் பீம் திரைப்படக் குழுவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணியிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டச் செயலா் கோ. ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சி நிா்வாகிகள் அளித்த மனு:

அண்மையில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படத்தில், வன்னிய சமூகத்தினா் சாதி வெறி வன்மம் உள்ளவா்கள்போல் சித்தரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இரு சமூகத்தினரிடையே சாதி கலவரத்தை தூண்டும் சூழலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் நிலையும் உள்ளது.

எனவே, இப்படத்தின் தயாரிப்பாளா்களான சூா்யா, ஜோதிகா மற்றும் இயக்குநா் ஞானவேல் ஆகியோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகம் தொடா்ந்து அமைதிப் பூங்காவாக திகழ ஆவண செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.