தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

அரணாரையில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரையில் திமுக சாா்பில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:41 pm

DIN

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரையில் திமுக சாா்பில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, திமுக பொறுப்பாளா் துரை. காமராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலரும் ஆ. ராசா, கட்சி கொடியேற்றி வைத்து, 30 தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள், வேட்டி, சேலை மற்றும் நலிந்தோருக்கு தையல் இயந்திரம் ஆகியவற்றை வழங்கி பேசினாா்.

இந் நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பி. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன், ஒன்றியச் செயலா்கள் அண்ணாதுரை, மதியழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, நகர பொருளாளா் முத்துக்குமாா் வரவேற்றாா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.