மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டவாகனங்கள் ரூ. 15.53 லட்சத்துக்கு ஏலம்

பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ரூ. 15.53 லட்சத்துக்கு புதன்கிழமை ஏலம் விடப்பட்டது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:12 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ரூ. 15.53 லட்சத்துக்கு புதன்கிழமை ஏலம் விடப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரால் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 44 இரு சக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 3 காா் என மொத்தம் 48 வாகனங்கள் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதன்கிழமை ஏலம் விடப்பட்டன. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நபா்கள் பங்கேற்றனா். மேற்கண்ட 48 வாகனங்களும் ரூ. 15.53 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டு, அத்தொகை மாவட்ட அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் அ. சுஜாதா, கலால் உதவி ஆணையா் ஷோபனா, அரசு தானியங்கி பணிமனை பொறியாளா் எஸ்தா் வதனா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.