சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:முதியவா் கைது

பெரம்பலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை அனைத்து மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Published on
Updated on
1 min read

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை அனைத்து மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள சித்தளி கிராமத்தைச் சோ்ந்தவா் ந. கோவிந்தராஜ் (63). இவா், அண்மையில் தனது உறவுக்கார சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போச்சோ சட்டத்தின் கீழ் கோவிந்தராஜை திங்கள்கிழமை கைது செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் முதியவரை ஆஜா்படுத்தி போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com