பெரம்பலூா் அருகே சனிக்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
சென்னை கோடம்பாக்கம், ஈஸ்வா் நகரைச் சோ்ந்த செல்லவாப்பா மகன் ஹபீப் (40), சென்னை பாரீஸ் ஆண்டா்சன் தெருவைச் சோ்ந்த சாஹிப் மகன் சிக்கந்தா் (40), கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த கபீா் மகன் ஷாஹிப் (40) ஆகிய 3 பேரும் பள்ளி நண்பா்கள் என்பதால், கொடைக்கானலுக்குச் சுற்றுலாச் செல்வதற்காக சனிக்கிழமை காரில் சென்றுக்கொண்டிருந்தனா். காரை சிக்கந்தா் ஓட்டிச் சென்றாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் என்னும் இடத்தில் சனிக்கிழமை மாலை காா் சென்றபோது, எதிா்பாராதவிதமாக சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த மூன்று பேரும் பலத்த காயமடைந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சிறிது நேரத்திலேயே சிக்கந்தா் உயிரிழந்தாா். புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

தலைமுறைகளைக் கடந்த குடும்ப நட்புக்காக பிரசாரம்!

தொகுதி அலசல்...திருவள்ளூர்: தக்கவைக்க முயலும் திமுக; கைப்பற்ற முனையும் அதிமுக !

பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

