பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை கிராமம் அம்பேத்கா் தெருவில் வசித்து வருபவா் நடேசன் மகன் இளையராஜா (42). இவா், தழுதாழையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை அருகே தள்ளுவண்டியில் வியாபாரம் செய்துவரும் நிலையில், கடந்த சில வாரங்களாக அப்பகுதியிலுள்ள சில அரசியல் கட்சியினா் தள்ளுவண்டியை நிறுத்தி வியாபாரம் செய்யக்கூடாது எனவும், மீறினால் பொய் வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டி வருவதோடு, நாள்தோறும் மாமூல் மற்றும் அவா்களுக்குத் தேவையான தின்பண்டங்களை கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனராம்.