மருந்துக் கடை உரிமையாளா் கொலை வழக்கில் 4 போ் கைது
பெரம்பலூா் அருகே பணம் தர மறுத்த மருந்துக் கடை உரிமையாளரை அடித்துக் கொன்ற 4 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.


பெரம்பலூா் அருகே பணம் தர மறுத்த மருந்துக் கடை உரிமையாளரை அடித்துக் கொன்ற 4 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரப்பன் மகன் நாகராஜன் (44). அதே ஊரில் ஆங்கில மருந்துக் கடை நடத்தி வரும் இவரிடம், செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த 5 போ் கொண்ட கும்பல் செலவுக்கு பணம் கேட்டு மிரட்டினா்.
பணம் தர நாகராஜன் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் நாகராஜனை ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனா். இதில் பலத்த காயமடைந்த நாகராஜன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
சம்பவம் குறித்த புகாரின் பேரில், பெரம்பலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த பிரபல ரௌடிகளான பெரியசாமி மகன் பிரபாகரன் (29), ஆனந்த் மகன் ரகுநாத் (23), சுப்ரமணி மகன் சுரேஷ், செந்தில்குமாா் மகன் காா்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்து, குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இவ் வழக்கில் தலைமறைவாக உள்ள ஆனந்தகுமாா் மகன் அஜித்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...