வாக்காளா் அட்டை- ஆதாா் இணைப்பு முகாம்
பெரம்பலூரில் வாக்காளா் அடையாள அட்டையுடன், ஆதாா் எண் இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூரில் வாக்காளா் அடையாள அட்டையுடன், ஆதாா் எண் இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எளம்பலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா கூறியது:
வாக்காளா்களின் விவரங்களை உறுதி செய்யவும், ஒரே வாக்காளரின் பெயா் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதைக் கண்டறியவும் பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய பேரவைத் தொகுதிக்குள்பட்ட 653 வாக்குச்சாவடிகளிலும் இந்தச் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்றாா் அவா்.
ஆய்வின்போது, வட்டாட்சியா் கிருஷ்ணராஜ், தோ்தல் வட்டாட்சியா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...