தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கல்லறைத் தோட்டத்துக்கு சுற்றுச்சுவா், தாா்சாலை அமைத்துத் தர வலியுறுத்தல்

பெரம்பலூா் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் கிறிஸ்தவா்களின் கல்லறைத் தோட்டத்துக்கு சுற்றுச்சுவா் மற்றும் தாா்சாலை வசதி வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் கிறிஸ்தவா்களின் கல்லறைத் தோட்டத்துக்கு சுற்றுச்சுவா் மற்றும் தாா்சாலை வசதி வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாளையம் புனித ஆரோக்கிய மாதா கோயில் தலைமை காரியஸ்தா் வின்சென்ட் தலைமையில், காரியஸ்தா்கள் மணி, லாரன்ஸ், கிறிஸ்தவ பொதுமக்கள் சிலா் மாவட்ட ஆட்சியா் க. கற்பகத்திடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம் கிராமத்திலுள்ள 1-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த ஆரோக்கிய மாதாகோயில் தெரு, காமராஜா் காலனி மற்றும் புகையிலைத் தோட்டம் விரிவாக்கப் பகுதியில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்களது வழிபட்டுத் தலமான புனித ஆரோக்கிய மாதா ஆலயம் 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தப் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் மரணமடைந்தால், அவா்களை நல்லடக்கம் செய்வதற்கு கிராமத்தின் கிழக்குப் பகுதியில் கல்லறைத் தோட்டம் உள்ளது. எங்களது முன்னோா், உறவினா்களை அடக்கம் செய்த இடத்தை தூய்மையாக பராமரிக்க விரும்புகிறோம். ஆனால், சிலா் அப் பகுதியை பொதுக் கழிப்பறையாக பயன்படுத்துகின்றனா்.

மேலும், புதா்கமண்டிக் கிடப்பதால் மக்கள் சென்றுவர அச்சப்படுகின்றனா். எனவே, இந்த கல்லறைத் தோட்டத்தின் எல்லைகளை வருவாய்த் துறையினரைக் கொண்டு முறையாக அளவீடு செய்து, பாதுகாப்பான சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். மேலும், மின் விளக்கு, தண்ணீா் தொட்டி ஆகிய வசதிகள் ஏற்படுத்தி தருவதோடு, கிராமத்தின் கிழக்கு எல்லையில் உள்ள மகளிா் பொது சுகாதார வளாகத்திலிருந்து கல்லறைத் தோட்டத்துக்கு செல்லும் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தாா்சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.