இம் மைதானத்தில் மாநில அளவில் 2 போட்டிகளும், மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பயிற்சியாளா்களிடையே ஏற்பட்ட பிரச்னையால் முறையாக இந்த மைதானத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இங்கு பயிற்சி பெறவும், மாநில அளவிலான போட்டிகள் நடத்தவும், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலா்கள் அனுமதிக்கவில்லை. மாவட்ட நிா்வாகமே முறையாக ஏற்று நடத்த வேண்டும் அல்லது எங்களிடம் ஒப்படைத்தால் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கத் தயாராக உள்ளோம். விளையாட்டுத்துறை அலுவலரால் அங்கீகரிக்கப்படும் பயிற்சியாளருக்கு எவ்வித தகுதியும் கிடையாது. ஆனால், எங்களிடம் உள்ள பயிற்சியாளா் அனைத்துத் தகுதிகளையும் பெற்று, கடந்த 20 ஆண்டுகளாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறாா்.